எம்மை பற்றி



Wednesday, October 14, 2009

இந்துவில் மறுபிறப்பு

இந்துவில் மறுபிறப்பு என்று ஒன்றை சொல்லி ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையிலேயே அவர்களை சம்மதிக்கவைக்கிறது.

அதாவது இந்த பிறப்பில் நல்லது செய்தால் மறுபிறப்பில் நல்லவனாக பிறப்பார்கள், வாழ்வார்கள் என்றும்.

அதேவேளை இன்று ஏழைகளாக இருப்பவர்கள் முற்பிறப்பில் பிழைகள், பாவங்கள் செய்தபடியால் தான் இந்தப் பிறப்பில் ஏழையாக இருக்கிறார்கள் என்று, அவர்கள் ஏழையாக இருக்கும் தன்மையை சம்மதிக்க வைக்கிறது.

அதேபோல் பணக்காரராக வாழ்பவர்கள் முற்பிறப்பில் நல்லது செய்து நல்லவர்களாக வாழ்ந்தபடியால்தான் இந்த பிறப்பில் சந்தோஷமாகவும், பணக்காரர்களாகவும் வாழ்கிறார்கள்.

அதாவது ஏழையாக வாழ்பவர்கள் தமக்கோ, தமது குழந்தைகளுக்கோ வயிற்றுப்பசிக்காக கூட ஒரு சின்ன பொய் சொல்லமுடியாமல் பயப்படுத்தபட்டு உள்ளார்கள்.

இந்தியாவை எடுத்து கொண்டால் அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்கள் சமயம், சாஷ்திரங்களை முழுமையாக நம்புபவர்கள், வணங்குபவர்கள்.
இவர்களில் 75 சதவீதத்திற்கு மேலானோர் வறுமை என்னும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்.
அப்படியானால் இவர்கள் எல்லோரும் முற்பிறப்பில் பிழைகள், பாவங்கள் செய்தவர்களா? அதனால் தான் இந்த பிறப்பில் இப்படி வறுமையாக வாழ்கிறார்களா? அப்படியானால் இவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வறுமைகோட்டிற்கு மேல் வரமுடியாதா? அல்லது வரமுடியாமல் ஆக்கப்பட்டுள்ளார்களா? இவர்கள் பரம்பரை பரம்பரையாக இந்தப் பிறவிகளாகத்தான் வாழமுடியுமா?

இந்த கருத்தை நம்பினால் பணக்காரர் எல்லோரும் தாம் பரம்பரை பரம்பரையாக சந்தோஷமாகவும் பணக்காரராகவும் வாழ்ந்து கொண்டே போவார்களா?

ஏழைகள் மறுபிறப்பு என்று ஒன்று உள்ள பயத்தில் வறுமைக்கோட்டிற்கு மேல் வருவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே போவார்களா?

ஏழ்மையையும் விரும்பாமல் மறுபிறப்பிற்கும் பயந்து இருதலைக்கொள்ளி எறும்பு போல் வாழும் அவலம் தொடருமா?

No comments:

Post a Comment

இந்து மகத்துவ பிரியர்கள்