எம்மை பற்றி



Sunday, May 4, 2014

CHAOS THEORY (ஒழுங்கின்மை கோட்பாடு)

 உலகில் எல்லா நடப்புகளும் கோர்வையாக பிரபஞ்சத்தோடு தொடர்ப்புடையதாக இருக்கிறது என்று  விளக்குவதற்கு முயற்சித்ததால் இந்த கட்டுரை பிறக்கிறது.

பிரபஞ்சத்தில் அத்தனையும் ஒரு ஒழுங்கு முறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது ஆனால் இப்போது ஒழுங்கான நிலையிலிருந்து ஒழுங்கற்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒழுங்கற்ற தன்மையோடு இருக்கும் தொடர் செயல்களில் ஒரு ஒழுங்கை தேடும் நிலை ஒழுங்கின்மை கோட்பாடு (CHAOS THEORY)எனப்படும்.

இந்த சித்தாந்தத்தின்படி ஒரு விஷயத்தின் மூலத்தை மிகச்சிறிய அளவில் மாற்றத்திற்கு உட்படுத்துவதால் முற்றிலும் மாறுபட்ட விளைவை ஏற்படுத்த முடியும். இந்த விளைவை (Butterfly Effect )பட்டாம் பூச்சி விளைவு என்று சொல்வார்கள்.


இதற்கு (butterfly effect) பட்டாம்பூச்சி விளைவு என்று வரக்காரணம் ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கையின் படபடப்பில் துவங்கும் அதிர்விற்கும் ஒரு பூகம்பத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது அந்த தத்துவம்
அதாவது (amazon forest) அமேசான் காட்டில் ஒரு பட்டாம் பூச்சி பறக்கும் போது அதன் இறக்கைகள் அசையப்பெற்று அத்தருணத்தில் காற்று மண்டலத்தில் ஒரு மாறுத்தல் ஒன்றை ஏற்படுத்துகிறது, அது படிப்படியாக மாற்றதிற்க்கு உட்பட்டு 5 மாதம் கழித்து ஆப்ரிக்காவில் ஏற்றபடவிருக்கும் போகும் புயல் தடுக்கப்படலாம் அல்லது அதுவே  அங்கு புயல் வரக்காரணமாகவும் இருக்கலாம்.


இந்த உலகத்தில் எல்லா நடப்புகளும் ஒரு சிறிய மூலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதை  அறிய அந்த நடப்பிற்கு பின்னணி என்ன என்று ஆராய்ந்தால் புரியக்கூடும்.இங்கு சுருக்கமாக இதை போல் மற்ற சிலவற்றையும் கூற தலைபட்டிருகிறேன்.


Copenhagen -  இந்த சித்தாந்தம் ஒரு பொருளை கவனிக்கும் போது அதன் உண்மையான நிலையை அவதானிக்கிறோமா இல்லை அது கவனிப்பவருடன் நிகழ்த்தும் தொடர்பை கவனிக்கிறோமா என்று அறிவது இயலாது என்கிறது. அதாவது பிரபஞ்சத்தில் 'பார்ப்பவன் என்றவன் இல்லை 'பங்கு கொள்பவன்' என்பது தான்  நிகழ்கிறது இப்பிரபஞ்சத்தின் நர்த்தனத்தில்-
HERE NO ONE IS A AUDIENCE,EVERY ONE IS A PARTICIPANT.
"ஆகாசம் பூமி  காற்றுமண்டலம் அனைத்து ஜீவிகளின் மூசுக்காற்றோடு  கலந்து காற்று இவை அனைத்தும் எவனொருவானோடு சுற்றி பின்னப்பட்டு உள்ளனவோ அவனே பரமாத்மா"-முண்டக உபநிஷதம்.

spider web -  என்ற  சித்தாந்தத்தின்  படி இப்பிரபஞ்சமே ஒரு பெரிய சிலந்தி வலை என்கிறது. ஆகவே ஒரு இடத்தில் உருவாகும் மாற்றம் வலை வழியாக பரவி இன்னொரு விஷயத்தையோ பொருளையோ பாதிக்கலாம் என்கிறது.
The world is like an enormous spider web and if you touch it, however lightly, at any point, The
vibration ripples to the remotest perimeter and the drowsy spider feels the tingle.


இப்போது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.










இந்துவும் ( விஞ் ) ஞானமும்


இப்பதிவில் இந்து சாஸ்திரங்கள் மற்றும் கீதை என்பற்றை  தர்க்க (logic) ரீதியாகவும் மெய்யியல் அடிப்படையில் உண்மைகளை உள்ள படி உங்களுக்கு உணர்த்துவதே எம் நோக்கம்.

தெளிவுற்றால் சீவனும் சிவனாகும் -திருமூலர்

இங்கு திருமந்திரமும் திருமூலரும் வர என்ன காரணம்  என நீங்கள் நினைக்கலாம். இந்த உலகத்தில் கண்ணுக்கு தெரியாத அணுக்கள் முதற்கொண்டு மானிடர்கள்,மிருகங்கள்,பட்சிகளின் ஒவ்வொரு செயல்களும் இயற்கையின் நடப்புகளுக்கும் தொடர்புகள் உண்டு அவை ஒருதொடர் கோர்வையாக இணைந்து இருக்கிறது இந்த பிரபஞ்சத்தோடு. ஒரு மேற்க்கத்திய தத்துவமானது இதை (chaos theory) ஒழுங்கின்மை கோட்பாட்டின் படி பட்டாம் பூச்சி விளைவு என்கிறது அதாவது ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கையின் படபடப்பில் துவங்கும் அதிர்விற்கும் ஒரு பூகம்பத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது அந்த தத்துவம். அதே போல் நாம்சொல்லப்போகும் அத்தனை விஷயங்களுக்கும் தொடர்புகள் இருக்கிறது. இந்த தத்துவத்தை மேலும் நீங்கள் விளங்கிகொள்ள இன்னொரு பதிவை இங்கு இணைத்து இருக்கிறேன்..chaos theory -ஒழுங்கின்மை கோட்பாடு


ஒரு ஆன்மீக சொற்பொழிவில் ஒருவர் திருமந்திரத்தின் சிறப்பை கூறும் போது அவர் இந்த உலகம் மஹா பிரளயத்தில் அழிந்த பின்னர் சிவனுக்கு பொழுது போகாவிட்டால் திருமந்திரத்தை எடுத்து படிப்பாராம்.


இது திருமந்திரத்தின் சிறப்பை பாமர மக்களுக்கு விளக்க சொல்லப்பட்டது,இதைப்போல் புராணங்களிலும்,வேதத்திலும் சாஸ்திரங்களும் சாதாரண மனித இனத்திற்கு மெய்ஞானத்தை பலவழிகளில் சொல்லிவிட்டு போய்விட்டனர் அது தவறில்லை நாம் தான் இன்னும் அறியாமையில் தொங்கிக்கொண்டு செய்ததையே செய்து கொண்டு இருக்கிறோம்.


சாஸ்திரங்கள் சாமான்ய மனிதர்கள் கடைபிடித்து தமது கர்மங்களை ஆற்ற சிறந்தது. யோகத்தில் மெய்ஞானத்தை அடையமுடியாத சாமான்யர்களுக்கு பக்தியோகத்தில் மெய்ஞானத்தை அடைய வழிவகுத்து தந்தார்கள் நம் முன்னோர்களான ரிஷிகள்.

"ஒரு சிறந்த கர்ம யோகிக்கு சாஸ்திரங்களை கடைபிடிக்க தேவையும் இல்லை அதை கடைபிடிக்கவிட்டால் பாவமும் தோஷமும் இல்லை ஏனெனில் யோகியானவன் அவன் ஞானிகளை விடவும் சாஸ்திரங்களை கடைபிடிப்பவர்களைவிடவும் மேலானவன் அவன் "யோகாரூடன்" ஆகிறான். அவன் தனது கர்மங்களில் விருப்பு வெறுப்பு அற்று செயல் படுகின்றான்,அவன் யோகத்தினாலேயே பிரம்மத்தை தியானிக்கிறான் பிரம்மத்தின் ஊடாகவே செயல்படுகிறான். மற்றபடி சாமான்யன் நான் சொல்லிய சாஸ்திரங்களின் படி வாழ்கையை வாழவேண்டும் இல்லை எனில் அவன் கொள்கைகள் கட்டுபாடற்ற வாழ்கையை வீணே வாழுகிறான் என்று அர்த்தம் " என்று பகவத்கீதையில் சொல்லப்படுகிறது.

இன்றும் பகவத் கீதை என்ற அரிய பொக்கிஷம் வெறும் நூலாகவே நம் வீடுகளில் உள்ளது ,அவ்வளவு தான். இனிமேல் இனியொரு கிருஷ்ணன் வந்து கீதையை சொன்னாலும் நம்மவர்கள் இப்படித்தான் இருப்பேன் என்றால் ஆச்சர்யம் இல்லை.

இதை படிக்க ஒரு காலத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள் அதாவது நாம் கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை ) பிள்ளைகள் பெற்று அவர்கள் கரையேறிய பின்னர் நம் வாழ்வு முடியப்போகும் வயதான காலத்தில் கீதையை படிப்பது உத்தமம் என்றுரைத்து வைத்து இருக்கிறர்கள். ."கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு " என்ற பழமொழிக்கு ஏற்ப இளமையில் ஞானத்தை உணர்ந்து வாழ முடியாவிடில் இறக்கிற காலத்தில் எதற்கு சுடலை ஞானம் .


பக்தியோகத்தில் மெய்ஞானத்தை கண்டவர்கள் அன்றைய 63 நாயன்மார்கள் மற்றும் 12 ஆழ்வார்கள் என்ற நம் முன்னோர்களான பக்திமான்கள் மற்றும் பலர் அவர்கள் இறைவனை பாடியும் போற்றியும் சாஸ்திரங்களின் படி சுயநலமன்றி வாழ்ந்தார்கள் அதில் அப்பழுக்கற்ற பக்தி இருந்தது.இதை நாம் நன்கு யோசிக்க வேண்டும்.

அன்று இந்து தர்மம் சாஸ்திரங்களும் ஆகமங்களும் பகவத்கீதை மற்றும் 108 உபநிஷதங்களை அடிப்படையாக கொண்டிருந்தது அதாவது கொள்கையை அடிப்படையாகக்கொண்டிருந்தது ஆகையால் சிறந்து விளங்கியது.ஆனால் இன்று இந்து தர்மம் தனிமனிதர்களை அடிப்படையாகக்கொண்டு வழிநடாத்தப்படுகிறது ; இங்கு யாரையும் உதாரணப்படுத்த விரும்பவில்லை ஏனெனில் மக்கள் அவர்களை நன்கு அறிவார்கள்.


எந்த வரலாற்றிலும் இயக்கம்,மதம்,போர் இவை மூன்றும் கொள்கைக்காக தவிர்ந்து தனிமனிதர்களுக்காக போராடி வென்றதில்லை.


உதாரணம்: 1. மகாபாரதப்போரில் பாண்டவர்கள் கொள்கைக்காக போராடினார்கள் ,கௌரவர்கள் துரியோதனன் என்ற தனிமனிதனுக்காய் போராடினார்கள் ஆகையால் தான் கௌரவர்கள் போரில் தோற்றார்கள்.


2.காந்தியின் உப்பு சத்தியாகிரகம்


இப்படி இருக்க இன்று பக்தியோகம் விற்பனைக்குரியதாகி விட்டது,கோயிலில் இறைவனை பணத்திற்கு ஆதாரமாக்கிவிட்டார்கள், குருமார்கள் ஆகமங்களை தமது வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்படுகின்றார்கள்,நான் எல்லோரையும் கூறவில்லை ஆனால் பெருவாரியாக உலகில் இப்படித்தான் நடக்கிறது. மக்களாகிய நாம் அவர்களின் வழியிலும் எமது வழியிலும் எல்லா மத சடங்குகளையும் சாஸ்திரங்களையும் நம்பிக்கைகளையும் உண்மையான காரண காரியம் அறியாது மேலோட்டமான நம்பிக்கையில் அறியாமையில் எல்லா விதமான பூஜைகள் மெய்ஞானமற்ற வழிபாடுகள் சடங்குமுறைகளை செய்கிறோம்.

அன்று இந்து மனிதனை நல்வழிப்படுத்தியதோடு சிந்தித்து செயல்படவைத்தது அனால் இன்றைய மாற்றத்தால்  அறியாமையில் செயல்படவைத்துவிட்டார்கள், இந்து கொள்கைகளை மாற்றி சாஸ்திரம் சடங்கு ஆகமங்களை மற்றும் வேதம் உட்பட தமது அடிமைகளாக்கிக்கொண்டனர்.


இதனையும் நான் இந்து தர்மத்தை எதிர்த்து கூறவில்லை உள்ளதை உள்ளபடி இருக்கச்செய்ய சொல்கிறேன் சுயநலமற்ற முறையிலும் அதோடு நாம் ஏன் இந்த சடங்கு சம்பிரதாயங்கள் சாத்திரங்களை மேற்கொள்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து செய்ய வேண்டும்.அறியாமையில் எந்த மதத்தையும் இயக்கவோ அதற்க்கு கீழ் பொய்யாக இயங்கவோ வேண்டாம், அப்படி இயங்குவது பயனற்ற செயலில் ஈடுபடுவதற்கு சமமாகும். அறியாமையில் எல்லாம் இருந்து கொண்டு சர்வேஸ்வரா,கிருஷ்ணா,நாராயணா என்று பாடுவதாலும் வேதங்களை ஓதுவதிலும் பயனில்லை இதனால் கடவுள் கண்ணுக்கு தெரியப்போவதும் இல்லை உணரப்போவதும் இல்லை வெறும் கல் மட்டும் தான் தெரியும்; செய்கிற காரியங்களை சாட்சிமார்க்கமாக இருந்து நோக்க வேண்டும் இதன் மூலமாகத்தான் ஒருவன் மெய்ஞானத்தை உணரமுடியும் இல்லையெனில் வீணே வாழவேண்டியது தான்.

பிரபஞ்சத்தின் இயற்கையின் படி தான் வேதங்களும் சாஸ்திரங்களும் இருந்து வருகின்றது அதை நாம் நமக்கு ஏற்றாற் போல் மாற்ற நினைப்பது இயற்கைக்கும் கடவுள் என்ற சக்திக்கும் மாறானது. அது ஒரு அணுவை பிளப்பதற்கு சமம்.


சுருக்கமாக சொல்லப்போனால் கீதையில் கிருஷ்ணன் மனித இனத்திற்கு சாஸ்திரத்தை போதிக்க வில்லை எது ஞானம் என்பதை அறிய வழிவகுத்து இருக்கிறான் சாஸ்திரங்கள் வெறுமனே கற்று வருவது அதற்கு ஒரு எல்லை உண்டு, ஆத்ம ஞானம் கற்காமல் வருவது எல்லைகள் இல்லை; சாஸ்திரங்கள் ஒரு மனிதனுக்கு வாழ தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் தெரியாதவர்களுக்கு கட்டுபாடுகள் நிறைந்த ஒரு ஒழுங்கு முறைகொண்ட வாழ்வை வாழ வழி சொல்வது ; ஞானம் தன்னிலையில் இருந்து உணர்வது.


எப்போதும் ஞானத்தை யாராலும் உங்களுக்கு தந்து விடமுடியாது கடவுளை விளக்கினாலும் அது அதை பற்றி சொல்லி விளக்குவதும் இயலாத ஒன்று (கடவுளையும் ஞானத்தையும் பற்றி முழுமையாக விளக்க நான் முழுமையான தகுதியை அடையவில்லை என நினைக்கிறேன்) ஏன் எனறால் அதை விளக்குவது நெருப்பை காணாதவர் எவரும் இல்லை ஆனால் நெருப்பையே காணாதவனிடம் போய் அதன் நிறம் இப்படித்தான் இருக்கும் காற்று இருந்தால் தான் நெருப்பு எரியும் தொட்டால் சுடும் ஏன்று விளக்குவதை போலவும் பனிக்குழைவை சாப்பிடாதவனிடம் போய் அதன் ருசியை பற்றியும் குளிர்மையை பற்றியும் விளக்குவதைப் போல் ஆகும்
ஆகையால் இங்கு ஞானத்தை விளக்குவதற்கு முற்படவில்லை ஏனேனில் அதை சுற்றயுள்ளவற்றை மட்டும் நான் இங்கு சொல்ல முற்படுகின்றேன்.

இவைகளை நான் சொன்னதால் நான் ஆத்தீகவதிகள் எல்லாம் ஒரு வாக்கியம் சொல்வார்கள் "தன்யனானேன் சுவாமி ஜென்மசாபல்யமாச்சு" அதை நான் உங்களுக்கு சொன்னதாலேயே உணர்கிறேன்.

இங்கு நான் "இந்து" என்பதற்கு பக்கத்தில் "மதம்" என்ற வசனத்தை
சேர்க்கவில்லை ஏனேனில்.......
தொடரும்....



Thursday, March 13, 2014

கடவுளும் அணுவும்

கடவுளும் அணுவும்


கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?



நம் உலகம் இந்த பிரபஞ்சத்தில் தேடிக்கொண்டிருக்கும்ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு மாபெரும் உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில்
இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.
 "அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
 அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
 அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
 அணுவின் அணுவினை அணுகலுமாமே"
 -ஆசான் திருமூலர்-

சீவன் என சிவன் என்ன வேறில்லை
 சீவனார் சிவனாரை அறிகிலர்
 சீவனார் சிவனாரை அறிந்தபின்
 சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
 -ஆசான் திருமூலர்-

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
 கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
 மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
 ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
 -ஆசான் திருமூலர்-

இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டுபின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்துபின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

நம் விஞஞானம் சொல்கிறது ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டால். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவேநாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
 (size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
 (100 micron = 0.1 millimeter)

இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்
0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
 அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

ஆகவேஇவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானதுநாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா அதுதான் HIGGS BOSON என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது (HIGGS BOSON) ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை.

இந்து மகத்துவ பிரியர்கள்